இலங்கை

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தலைமை தேரர் அதிரடி கைது

Desktop Image Mobile Image

பதினைந்து வயது சிறுமி ஒருவரை கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர்  தனியார் மருத்துவமனை ஒன்றில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக இந்த பிக்குவுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நேற்று அனுராதபுர நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்தது.

 

 

இதனை விசாரித்த நீதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு எதிராக  உடனடி கைது உத்தரவும் வெளிநாட்டு பயண தடையும் விதித்தார்.

இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியின் தாயும் இதில் உதவி செய்ததாக கைது செய்யப்பட்டு மே 15 வரை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

 

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, கைது தொடர்பான முழு விவரங்களும் இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் அனுராதபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Back to top button