கிளிநொச்சிஇலங்கைவடக்கு மாகாணம்
கிளிநொச்சியில் கன்டர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்து: ஒருவர் படுகாயம்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதியில், கந்தசுவாமி ஆலயம் முன்பாக இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
தகவல்களின் படி, ஏ9 வீதியின் இருவழிப் பாதையிலிருந்து மாற்று வழிப் பாதைக்கு செல்ல முயன்ற கன்டர் ரக வாகனத்தில், டிப்போ சந்தியில் இருந்து கந்தசுவாமி ஆலய பகுதி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதாக கூறப்படுகிறது.
விபத்தின் தாக்கத்தில் மோட்டார் சைக்கிள் கன்டர் வாகனத்தின் பின்புற சக்கரத்தில் சிக்கியதுடன், இரு வாகனங்களும் சேதமடைந்துள்ளன.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




