நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு; இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர எச்சரிக்கை

திபெத் பகுதியில் இருந்து போதே கோஷி நதி ஊடாக நேபாளத்தின் ரசுவா மாவட்டத்துக்குள் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் திமுரே மற்றும் சியாப்ருபெசி பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக காத்மண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும், போதே கோஷி மற்றும் திரிசூலி நதிகளின் தாழ்நில கரையோரப் பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ரசுவா, நுவகோட், தடிங், கொர்க்கா, சித்வான் உள்ளிட்ட மாவட்டங்களிலும், போதே கோஷி மற்றும் திரிசூலி நதிப் பள்ளத்தாக்குகளை அண்டிய பகுதிகளிலும் வசிக்கும் அல்லது பயணம் செய்யும் இலங்கையர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், உதவி அல்லது ஒருங்கிணைப்பு தேவைப்படும் இலங்கையர்கள் உடனடியாக காத்மண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகத்தை தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நேபாளத்தில் உள்ள இலங்கைப் பிரஜைகளுக்கு உதவுவதற்காக தூதரக அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 மணி நேர அவசர உதவி எண்: +9779851048653
மின்னஞ்சல்: slemb.kathmandu@mfa.gov.lk




