
மலையகத்தை கல்வியால் உயர்த்துவோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற மேதின கூட்;டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மலையக பிள்ளைகளின் கல்வி நிலை உயர வேண்டும்.
இனிவரும் எதிர்கால சந்ததியினரின் எதிர்காலத்தை வீணக்க முடியாது.
மலையகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டுமாயின் அங்குள்ள மாணவர்களின் கல்வி நிலை உயர வேண்டும்.
கல்வியால் மலையகத்தை உயர்த்துவோம்.
அனைத்து மலையக மக்களுக்கும் மதிப்பளிக்க கூடிய வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள் தற்போது அச்சத்தில் உள்ளனர்.
பொதுமக்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை.
அரச அதிகாரிகளோ அல்லது அவர்களது உறவினர்களோ யாராக இருந்தாலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.




