யாழ்ப்பாணம்இலங்கைவடக்கு மாகாணம்
யாழ். காரைநகர் கடற்கரையில் கரையொதுங்கிய அடையாளம் தெரியாத சடலம்!

யாழ்ப்பாணம் காரைநகர் – வேரப்பிட்டி கடற்கரையில் இன்று (24) அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
கடற்கரைக்கு சென்றிருந்தவர்கள் கடலில் சடலம் ஒன்று மிதந்து வருவதை அவதானித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன், உயிரிழந்தவர் யார் என்பது தொடர்பில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




