ஜூரெலின் சதத்தில் வலுவான நிலைக்கு முன்னேறிய இந்தியா; இலங்கைக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 503 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தனது முதல் இன்னிங்ஸை இடைநிறுத்தியுள்ளது. இதன் மூலம் இந்தியா போட்டியில் வலுவான நிலையைப் பெற்றுள்ளது.
முதல் நாள் முடிவில் 300 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணி, இரண்டாம் நாளிலும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடியது. துருவ் ஜூரெல் ஆட்டமிழக்காமல் 115 ஓட்டங்களையும், ரிஷப் பண்ட் 63 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும், கேசர நுவந்த மற்றும் பிரபாத் ஜெயசூர்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணிக்கு ஆரம்பத்திலேயே பின்னடைவு ஏற்பட்டது. லஹிரு உடாரா 1 ஓட்டத்திலும், பிரபாத் ஜெயசூர்யா 2 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
மந்தமான வெளிச்சம் காரணமாக ஆட்டம் முன்கூட்டியே நிறுத்தப்பட்டபோது இலங்கை அணி 3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 8 ஓட்டங்களை பெற்றிருந்தது. இதனால் இந்தியாவை விட 495 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி உள்ளது.




