விளையாட்டுசெய்திகள்

ஜூரெலின் சதத்தில் வலுவான நிலைக்கு முன்னேறிய இந்தியா; இலங்கைக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி

Desktop Image Mobile Image

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 503 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தனது முதல் இன்னிங்ஸை இடைநிறுத்தியுள்ளது. இதன் மூலம் இந்தியா போட்டியில் வலுவான நிலையைப் பெற்றுள்ளது.

முதல் நாள் முடிவில் 300 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணி, இரண்டாம் நாளிலும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடியது. துருவ் ஜூரெல் ஆட்டமிழக்காமல் 115 ஓட்டங்களையும், ரிஷப் பண்ட் 63 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும், கேசர நுவந்த மற்றும் பிரபாத் ஜெயசூர்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணிக்கு ஆரம்பத்திலேயே பின்னடைவு ஏற்பட்டது. லஹிரு உடாரா 1 ஓட்டத்திலும், பிரபாத் ஜெயசூர்யா 2 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

மந்தமான வெளிச்சம் காரணமாக ஆட்டம் முன்கூட்டியே நிறுத்தப்பட்டபோது இலங்கை அணி 3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 8 ஓட்டங்களை பெற்றிருந்தது. இதனால் இந்தியாவை விட 495 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி உள்ளது.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

Related Articles

Back to top button
Tamil Lk செய்திகள்