இலங்கைசெய்திகள்வடக்கு மாகாணம்வவுனியா

வவுனியாவில் CCTV-யில் சிக்கிய குப்பை கொட்டிய இருவருக்கு அபராதம்

Desktop Image Mobile Image

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் வீதியோரங்களில் சட்டவிரோதமாக குப்பைகளை கொட்டிய இருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் தொடர்ச்சியாக குப்பைகள் கொட்டப்படுவதாக கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து, பிரதேச சபையினர் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியிருந்தனர்.

 

 

இந்த நிலையில், வீதிக்கரையில் குப்பைகளை வீசிய இருவர் CCTV காட்சிகளின் மூலம் அடையாளம் காணப்பட்டனர். இதையடுத்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், தலா 2,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

 

 

பொது இடங்களை மாசுபடுத்தும் நபர்களுக்கு எதிராக எதிர்காலத்திலும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரதேச சபை எச்சரித்துள்ளது.

Related Articles

Back to top button