கிளிநொச்சிஇலங்கைசெய்திகள்வடக்கு மாகாணம்
ரயில் கடவையை கடக்க முயன்ற கார் மீது ரயில் மோதல்; சிறுமி பலி, இருவர் படுகாயம்

கிளிநொச்சி – யாழ். பல்கலைக்கழக வீதியில் உள்ள ரயில் கடவையில் இன்று (26) ஏற்பட்ட கோர விபத்தில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயில், ரயில் கடவையை கடக்க முயன்ற காரை மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காரில் பயணித்த 17 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த இருவர் உடனடியாக மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




