மன்னார்இலங்கைசெய்திகள்வடக்கு மாகாணம்
தலைமன்னாரில் சோகம்; கணவனின் கத்திக்குத்தில் இரு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு

தலைமன்னார் ரயில் நிலையப் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று (26) காலை இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கணவனால் கத்திக்குத்துக்கு இலக்கானதாக தெரிவிக்கப்படும் குறித்த பெண், உடனடியாக தலைமன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் இரண்டு பிள்ளைகளின் தாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவரை தலைமன்னார் பகுதியில் வைத்து தலைமன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




