டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தீ விபத்து – முதலமைச்சர் விஜய் புறப்பட்ட சில நிமிடங்களில் சம்பவம்

டெல்லியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தின் உணவகப் பகுதியில் இன்று (10) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தமிழ்நாடு இல்ல வளாகத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உணவகப் பகுதியில் திடீரென தீ பரவியதைத் தொடர்ந்து, அங்கிருந்து அதிகளவில் கரும்புகை வெளியேறியதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்டிருக்கக்கூடிய மின்கசிவு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
எனினும், இந்த தீ விபத்தில் எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




