வானிலைஇலங்கைசெய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் தொடரும் சீரற்ற வானிலை – பலத்த மழை மற்றும் காற்று குறித்து எச்சரிக்கை

Desktop Image Mobile Image

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடன் கூடிய சீரற்ற வானிலை நிலவும் சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் பல பகுதிகளிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் சுமார் 75 மில்லிமீற்றர் வரையான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

 

அதேவேளை, காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகள் கொந்தளிப்பாக காணப்படக்கூடும் என்பதால், மறு அறிவித்தல் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனிடையே, களனி கங்கை, களு கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர்மட்டம் சில பகுதிகளில் உயர்வடைந்துள்ளதாக நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆற்றங்கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

மோசமான வானிலை காரணமாக தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் மரங்கள் முறிந்து விழும் அபாயம் காணப்படுவதால், பொதுமக்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கவனித்து பாதுகாப்பாக செயல்படுமாறும் கோரப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button