இலங்கை

அதிக இரைச்சல் ஏற்படுத்தும் வாகனங்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை

Desktop Image Mobile Image

பொதுச் சாலைகளில் அதிக இரைச்சலை ஏற்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட ஒலி அடக்கிகள் மற்றும் புகை வெளியேற்றும் அமைப்புகள் பொருத்தப்பட்ட வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் பிரிவு எச்சரித்துள்ளது.

இத்தகைய விதிமீறல் வாகனங்கள் கண்டறியப்படும் சந்தர்ப்பங்களில் அவை பொலிஸாரின் காவலில் எடுக்கப்படுவதுடன், தேவையான நேரங்களில் சாரதிகளுக்கு போதைப்பொருள் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தொழில்நுட்ப அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 

 

மாற்றியமைக்கப்பட்ட புகை வெளியேற்றும் அமைப்புகள் மற்றும் அதிக இரைச்சலை உருவாக்கும் வாகனங்கள் காரணமாக பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுவதாக அண்மைக் காலமாக அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் கண்காணிப்பு மற்றும் சட்ட அமலாக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

 

 

பொதுமக்களின் அமைதியையும் சாலைப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், வாகன உரிமையாளர்கள் நடைமுறையில் உள்ள சட்டங்களைப் பின்பற்றி செயல்படுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Articles

Back to top button