உலக செய்திகள்செய்திகள்

ஜப்பானின் சிபா மாகாணத்தில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

Desktop Image Mobile Image

ஜப்பானின் சிபா மாகாணத்தில் இன்று (26) 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் மற்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளன.

உள்ளூர் நேரப்படி நண்பகல் 12:46 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், டோக்கியோ உள்ளிட்ட அருகிலுள்ள பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. எனினும், இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

 

 

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, நிலநடுக்கம் சுமார் 43 முதல் 50 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் உயிரிழப்புகள் அல்லது பாரிய சேதங்கள் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Related Articles

Back to top button