
2025ஆம் ஆண்டுக்கான G.C.E. சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களை மறுபரிசீலனை செய்வதற்கான Online விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது.
விண்ணப்பங்கள் ஜூன் 25 முதல் ஜூலை 8 வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் அனைவரும் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
ஒரு பாடத்திற்கான கட்டணம் ரூ.200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், கடன் அட்டை, வரவு அட்டை அல்லது தபால் அலுவலகம் மூலம் பணம் செலுத்த முடியும்.
ஒரு பரீட்சார்த்தி ஒரே ஒரு விண்ணப்பத்தை மட்டுமே சமர்ப்பிக்க முடியும் என்பதால், அனைத்து விவரங்களையும் சரிபார்த்து விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.




