இலங்கைசெய்திகள்

வளர்ப்புப் பிராணிகள் பதிவு கட்டாயம்

Desktop Image Mobile Image

வளர்ப்புப் பிராணிகளை பதிவு செய்வதையும், விசர்நாய் கடி நோயை கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட புதிய சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

“விசர்நாய் கடி நோயை இல்லாதொழித்தல் மற்றும் வளர்ப்புப் பிராணிகளைப் பதிவு செய்தல் சட்டமூலம்” என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த சட்டம், நாட்டில் வளர்க்கப்படும் பிராணிகள் தொடர்பான ஒழுங்குமுறைகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

இதன் மூலம் வளர்ப்புப் பிராணிகளின் பதிவை கட்டாயமாக்குவதோடு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பொறுப்புகள் மற்றும் அதிகாரங்களும் தெளிவுபடுத்தப்படவுள்ளன.

குறித்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வெளியிட்டு, அதன் பின்னர் நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

Related Articles

Back to top button