வவுனியாஇலங்கைசெய்திகள்வடக்கு மாகாணம்

ஸ்ரீ பாத யாத்திரைக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த விபரீதம்! 5 பேர் பயணித்த கார் விபத்தில் சிக்கியது

Desktop Image Mobile Image

ஸ்ரீ பாத யாத்திரைக்காக வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் இருந்து சென்ற குழுவினர் பயணித்த கார், மோகினி நீர்வீழ்ச்சி பகுதியில் சாலையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று (19) இரவு நல்லதண்ணி பொலிஸாரை சந்தித்த குழுவினர், ஸ்ரீ பாத யாத்திரைக்கு செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளனர். அப்போது மோசமான வானிலை நிலவியதால் இரவு நேரத்தில் பயணிப்பதைத் தவிர்த்து, மறுநாள் காலை செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தியிருந்தனர்.

இதனையடுத்து, குளிப்பதற்காக காரில் திரும்பிச் சென்றபோது நள்ளிரவு சுமார் 12 மணியளவில் நல்லதண்ணி–மஸ்கெலியா பிரதான சாலையில் உள்ள மோகினி நீர்வீழ்ச்சி பகுதியில் கார் சாலையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

காரில் மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும் இருந்த நிலையில், விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும், வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை நல்லதண்ணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button
Tamil Lk செய்திகள்