உலக செய்திகள்

இந்தோனேசிய ரயில் விபத்து: 14 பேர் உயிரிழந்த சம்பவம்

இந்தோனேசியாவின்(Indonesia) பெகாசி திமூர் ரயில் நிலையத்தில், நடைமேடையில் நின்றிருந்த பயணிகள் ரயில் மீது மற்றொரு விரைவு ரயில் மோதிய விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 40 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

இதனிடையே, ரயில் விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் தொடர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியும் நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

 

இவ்விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுவதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button