ராகுல் காந்தி கைது: மத்திய அரசுக்கு தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம்

டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகப் போராடிய இளைஞர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைதியான ஜனநாயகப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களை கைது செய்தது ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என்றும், மத்திய அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், டெல்லியில் நடைபெற்ற சம்பவத்தைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகம் முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
அத்துடன், நீட் தேர்வு முறை முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும் என்பது தனது கட்சியின் உறுதியான நிலைப்பாடு என்றும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதே அதற்கான நிரந்தரத் தீர்வு என்றும் விஜய் வலியுறுத்தியுள்ளார்.



