இலங்கையாழ்ப்பாணம்வடக்கு மாகாணம்

யாழில் பெண்ணின் விரல்களை துண்டித்த அயல் வீட்டு இளைஞர்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலியகோவில் பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் பெண்ணொருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் இரண்டு விரல்கள் துண்டாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கிடைத்த தகவல்களின் படி, அயல் வீட்டைச் சேர்ந்த இளைஞருக்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கும் இடையே ஏற்கனவே முரண்பாடு நிலவி வந்துள்ளது.

 

 

இந்நிலையில், பெண்ணின் கணவர் வேலை முடிந்து வீடு திரும்பிய போது, குறித்த இளைஞன் அவரை வழிமறித்து துவிச்சக்கர வண்டியை பறித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து கணவர் இது குறித்து மனைவியிடம் தெரிவித்ததை அடுத்து, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

 

 

இதன்போது குறித்த இளைஞன் பெண்ணை வாளால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

பலத்த காயமடைந்த பெண் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் இளைஞனுக்கு ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button