உலகக்கிண்ணப் போட்டியில் பங்கேற்க முடியாத ஓமருக்கு பிபாவின் ஆதரவு – முழு சம்பளமும் புதிய வாய்ப்பும்

2026 உலகக்கிண்ண கால்பந்து போட்டிக்கான நடுவராகத் தேர்வு செய்யப்பட்டிருந்த சோமாலியாவைச் சேர்ந்த ஓமர் ஆர்டன், முறையான பயண ஆவணங்கள் இருந்தபோதிலும் அமெரிக்காவின் கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக அந்நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகக் கால்பந்தின் மிகப்பெரிய தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்த இந்த துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையிலும், அவரது திறமை மற்றும் சேவையை மதிக்கும் வகையில் அவருக்கு வழங்கப்பட வேண்டிய முழு சம்பளத்தையும் வழங்குவதாக பிபா அறிவித்துள்ளது.
அத்துடன், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள UEFA சூப்பர் கிண்ணப் போட்டிக்கான நடுவராக ஓமர் ஆர்டன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அவரது தொழில்முறை திறமைகளுக்குக் கிடைத்துள்ள முக்கிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.
இதனிடையே, சொந்த நாடான சோமாலியாவிற்கு திரும்பிய ஓமருக்கு பொதுமக்களும் விளையாட்டு ரசிகர்களும் உற்சாகமான வரவேற்பு அளித்துள்ளனர்.
அந்த சந்தர்ப்பத்தில் கருத்து வெளியிட்ட ஓமர், “அடுத்த உலகக்கிண்ணப் போட்டியில் நிச்சயமாக பங்கேற்பேன்” என நம்பிக்கை தெரிவித்தார்.
உலகக்கிண்ண வாய்ப்பை இழந்தபோதிலும், பிபாவின் ஆதரவும் புதிய சர்வதேச நியமனமும் ஓமரின் நடுவர் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளதாக விளையாட்டு விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.




