
பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்குத் தொகுதி என இரண்டிலும் வெற்றியீட்டிய தவெக தலைவர் விஜய் வெற்றி சான்றிதழ் பெற்றுக்கொள்வதற்காக தனது வீட்டிலிருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு புறப்பட்டுள்ளார்..
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் சூழலில், மாலை 6 மணி நிலவரப்படி தவெக 86 இடங்களில் வெற்றி, 21 இடங்களில் முன்னிலை என மொத்தம் 108 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.
34 தொகுதிகளில் பெரும்பான்மை பெற 118 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் எனும் நிலையில் தனிப்பெரும் கட்சியாக தவெக வென்றுள்ளது. அடுத்த இடத்தில் திமுக உள்ளது. மூன்றாவது இடத்தில் அதிமுக உள்ளது.
இந்நிலையில், வெற்றி பெற்ற தவெக வேட்பாளர்கள் அனைவரும் சென்னையை அடுத்த மாமல்லபுரம் விடுதிக்கு வருமாறு விஜய் அழைத்துள்ளார்.
தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள விஜய், ஆட்சி அமைக்க ஆயத்தமாகி வரும் நிலையில், பெரும்பான்மை இல்லாவிட்டாலும் சில கட்சிகளின் ஆதரவை பெற்று விஜய் ஆட்சி அமைப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே வெற்றி பெற்ற தவெக வேட்பாளர்கள் அனைவரும் சென்னையை அடுத்த மாமல்லபுரம் விடுதிக்கு வருமாறு விஜய் அழைத்துள்ளார்.
திமுகவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மட்டுமின்றி பல அன்பில் மகேஷ், மூர்த்தி உள்ளிட்ட சிட்டிங் அமைச்சர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
திமுக தோல்வியை சந்தித்ததால் அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில் அண்ணா அறிவாலயத்திற்கு மு.கஸ்டாலின் வருகை தந்துள்ளார்.



