யாழ்ப்பாணம்இலங்கைவடக்கு மாகாணம்

சுன்னாகத்தில் குடும்பத் தகராறு சோகத்தில் முடிந்தது – 24 வயது இளைஞர் உயிரிழப்பு

Desktop Image Mobile Image

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் குடும்பத் தகராறைத் தொடர்ந்து 24 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆரம்ப தகவல்களின்படி, புதிய தொலைபேசி சிம் அட்டையைப் பெறுவதற்காக தாயாரின் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்த அனுமதி கோரி இளைஞர் கேட்டதாகவும், அதற்கு சம்மதம் கிடைக்காததைத் தொடர்ந்து குடும்பத்தினருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, இளைஞர் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் பின்னர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்ததுடன், சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button