திருகோணமலைஇலங்கைகிழக்கு மாகாணம்

சுற்றுலாப் பயணிகளை கவரும் திருகோணமலை மான்கள்

Desktop Image Mobile Image

இலங்கைக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் இடங்களில் ஒன்றாக திருகோணமலையின் மான் பூங்கா மற்றும் அங்குள்ள சுதந்திரமாக நடமாடும் மான்கள் மாறியுள்ளன.

திருகோணமலைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், மான் பூங்காவில் மட்டுமன்றி வரலாற்றுச் சிறப்புமிக்க கோணேஸ்வரர் ஆலயம், ஃப்ரெட்ரிக் கோட்டை (Fort Frederick) மற்றும் நகரின் பல பகுதிகளில் சுதந்திரமாக உலா வரும் மான்களை கண்டு ரசித்து புகைப்படங்களும் எடுத்து வருகின்றனர்.

இயற்கை மான் இனங்களை பாதுகாக்க அரச நிறுவனங்களும், அரச சார்பற்ற அமைப்புகளும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், மான்கள் வாழும் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வீசும் பிளாஸ்டிக், பொலித்தீன் மற்றும் உணவுக் கழிவுகள் மான்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதனால், மான்களுக்கு பொருந்தாத உணவுகளை வழங்குவதைத் தவிர்க்கவும், சுற்றுப்புறச் சூழலை தூய்மையாகப் பேணவும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், திருகோணமலையில் வாழும் மான் இனங்களின் எண்ணிக்கையை ஆண்டுதோறும் கணக்கெடுத்து, அவற்றின் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Back to top button