வவுனியாஇலங்கைசெய்திகள்வடக்கு மாகாணம்

வவுனியாவில் தூய்மைப் பணியில் கைகோர்த்த பொதுமக்கள், அதிகாரிகள்

Desktop Image Mobile Image

தூய்மையான மற்றும் ஆரோக்கியமான சூழலை உருவாக்கும் நோக்கில் வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் சிரமதானப் பணியில் பொதுமக்கள் ஒன்றிணைந்து பங்கேற்றுள்ளனர்.

214D வைரவப்புளியங்குளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட குட்செட் வீதி உள்ளிட்ட பகுதிகளில் “தூய்மையான தேசத்திற்கான தேசிய மக்கள் பணி” வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இந்தப் பணியில் கிராம மக்கள் மற்றும் பொதுமக்களுடன் அரச அதிகாரிகள், பொலிஸார் மற்றும் உள்ளூர் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் ஆர்வத்துடன் இணைந்தனர்.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

சிரமதானத்தின் போது வீதியோரங்கள், பொது இடங்கள், நீர்நிலைகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தேங்கியிருந்த கழிவுகள் அகற்றப்பட்டன.

மேலும், டெங்கு நோய் பரவலைத் தடுப்பது மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது தொடர்பிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

“ஒன்றிணைந்து செயல்படுவோம் – டெங்கு ஒழிப்போம் – பாத்தினியத்தினை அகற்றுவோம்” என்ற நோக்கத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, சமூக ஒற்றுமை மற்றும் பொது சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளது.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

பொதுமக்களின் தொடர்ச்சியான ஒத்துழைப்புடன், ஏனைய பகுதிகளிலும் இதுபோன்ற சிரமதானப் பணிகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button