செய்திகள்முல்லைத்தீவுவடக்கு மாகாணம்

கொக்காவில் பகுதியில் அதிகாலை விபத்து: சிக்கிய சாரதியை மீட்க ஒரு மணி நேர போராட்டம்

Desktop Image Mobile Image

முல்லைத்தீவு கொக்காவில் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் – கண்டி வீதியில் மணல் ஏற்றிச் சென்ற பாரவூர்தியும் மகேந்திரா ரக வாகனமும் நேருக்கு நேர் அல்லது ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தின் தாக்கத்தில் பாரவூர்திச் சாரதி வாகனத்திற்குள் சிக்கிக்கொண்ட நிலையில், அவரை மீட்பதற்காக சுமார் ஒரு மணி நேரம் மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் சாரதி காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

மோதலின் காரணமாக இரு வாகனங்களும் பலத்த சேதமடைந்துள்ளன.

மகேந்திரா ரக வாகனத்தில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டிருந்த பெருமளவு இளநீர்கள் விபத்தைத் தொடர்ந்து வீதியிலும் அதன் அருகிலுள்ள பகுதிகளிலும் சிதறிக் கிடந்தன.

இந்த விபத்தினால் குறித்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Back to top button