உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணை தாக்குதல்: 3 இந்திய மாலுமிகள் உயிரிழப்பு

Desktop Image Mobile Image

ஓமன் கடலோரப் பகுதிக்கு அருகிலுள்ள ஹோர்முஸ் நீரிணை பகுதியில் எண்ணெய் கப்பல் மீது மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க படையினரின் தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலாவ் நாட்டின் கொடியை ஏந்திச் சென்ற ‘செட்டெபெல்லோ’ என்ற எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க படையினர் நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் மொத்தம் 24 இந்தியர்கள் பணியாற்றிய நிலையில், அவர்களில் 21 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

எனினும், இந்த தாக்குதலில் ஆதித்ய சர்மா, சிவானந்த் சவுரேஷியா மற்றும் கப்பலின் தலைமை பொறியாளர் பட்னாலா சுரேஷ் ஆகிய மூன்று இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

 

 

இந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க தூதரகத்தின் மூத்த அதிகாரியை அழைத்து இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

மேலும், வளைகுடா பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றத்தை குறைத்து, பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மற்றும் தூதரக வழிமுறைகள் மூலம் தீர்வு காண வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

Related Articles

Back to top button