உலக செய்திகள்
எவரெஸ்ட் சிகரத்தில் புதிய உலக சாதனை: ஒரே நாளில் 274 பேர் ஏற்றம்

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை ஒரே நாளில் 274 மலையேறுபவர்கள் நேபாளப் பகுதி வழியாக ஏறி புதிய உலக சாதனையை பதிவு செய்துள்ளனர்.
நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் பகுதிக்கு இடையில் அமைந்துள்ள 8,849 மீட்டர் (29,032 அடி) உயரமுடைய எவரெஸ்ட் சிகரம், இரு பக்கங்களிலிருந்தும் ஏறக்கூடியதாக உள்ளது.
இதற்கு முன்பு நேபாளப் பகுதி வழியாக ஒரே நாளில் 223 பேர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்ததே சாதனையாக இருந்தது.
அந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டு, ஒரே நாளில் 274 பேர் சிகரத்தை வெற்றிகரமாக அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




