
தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தின் புதிய பேருந்து சேவைகளை ஆரம்பித்து வைத்த தமிழக முதல்வர் ஜோசப் விஜய், பின்னர் பொதுமக்களுடன் இணைந்து அரசுப் பேருந்தில் பயணம் மேற்கொண்டார்.
சென்னை, கோவை உள்ளிட்ட 6 போக்குவரத்து கோட்டங்களுக்காக 300 புதிய அரசுப் பேருந்துகளின் சேவையை முதல்வர் இன்று தொடங்கிவைத்தார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து இயக்கப்பட்ட 29ஏ பேருந்தில் ஏறிய அவர், ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
பேருந்தின் முன்புற இருக்கையில் அமர்ந்த முதல்வர் விஜய், பயணத்தின் போது தனது கைப்பேசியில் வீதியோர மக்களையும் பயண அனுபவத்தையும் பதிவு செய்தார்.
சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து கலங்கரை விளக்கம் நோக்கிப் பயணித்த அவர், பின்னர் அதே பேருந்தில் மீண்டும் தலைமைச் செயலகத்திற்குத் திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் இந்த திடீர் பேருந்து பயணம் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.




