யாழ்ப்பாணம்இலங்கைசெய்திகள்வடக்கு மாகாணம்
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை வீதியில் கார் விபத்து; மின்கம்பத்தில் மோதி பலத்த சேதம்

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியில் இன்று (22) மதியம் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியோர பள்ளத்துக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
அராலிச் சந்தியை அண்மித்த பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த காரே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்குள்ளான கார், யாழ்ப்பாணம் – வேலணை பகுதியை நோக்கி புதிதாக அமைக்கப்பட்டு வரும் அதி உயர் மின் கம்பத்தில் மோதியதில் பலத்த சேதமடைந்துள்ளது.
பொலிஸாரின் விசாரணைகளைத் தொடர்ந்து பாரம் தூக்கும் வாகனத்தின் உதவியுடன் விபத்துக்குள்ளான கார் அங்கிருந்து அகற்றப்பட்டது.
எனினும், இந்த விபத்தில் எவருக்கும் பாரதூரமான பாதிப்புகள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை தூக்கமே விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.




