4 ஆண்டு ரகசிய காதல்: மாமியாரை திருமணம் செய்த மருமகன் – வைரலாகும் வீடியோ

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வினோதமான திருமணச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
தகவல்களின்படி, கடந்த நான்கு ஆண்டுகளாக ரகசிய காதல் உறவில் இருந்ததாகக் கூறப்படும் மருமகனும் மாமியாரும் நீதிமன்றத்தில் சட்டப்படி திருமணம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
திருமணத்திற்குப் பின்னர், இருவரும் தங்களது திருமணச் சான்றிதழை கையில் ஏந்தியபடி வெளியிட்ட காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், தனது மனைவியுடன் இருந்த உறவை முறித்துக் கொண்டு, நீண்டகாலமாக காதல் தொடர்பில் இருந்த மாமியாரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததாக மருமகன் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான காணொளி இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், குடும்பத்தினரையும் உறவினர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எந்தவொரு தரப்பினரும் காவல்துறையில் உத்தியோகபூர்வ புகார் அளிக்கவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு கருத்துகள் வெளியாகி வருவதுடன், இது தற்போது இணையத்தில் அதிகம் பேசப்படும் செய்திகளில் ஒன்றாக மாறியுள்ளது.




