வவுனியாஇலங்கைசெய்திகள்வடக்கு மாகாணம்

வவுனியா நொச்சிமோட்டையில் மரத்தில் இருந்து வீழ்ந்து குடும்பஸ்தர் உயிரிழப்பு

Desktop Image Mobile Image

வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் மரத்தில் இருந்து தவறி விழுந்து 45 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (18.08.2026) மதியம் இடம்பெற்றுள்ளது.

ஓமந்தை பகுதியைச் சேர்ந்த குமார் என்ற 45 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரம்வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்த குறித்த நபர், இன்று நொச்சிமோட்டை பகுதியில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

இதன்போது படுகாயமடைந்த அவரை மீட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Back to top button
Tamil Lk செய்திகள்