இந்தியா

அ.தி.மு.க – தி.மு.க கூட்டணி ஆட்சியமைக்க தீவிர பேச்சு-தமிழக அரசியல் அதிர்வலை

Desktop Image Mobile Image

108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைக்கத் தீவிர முயற்சி எடுத்து வரும் நிலையில், திராவிடக் கட்சிகள் ஒன்றிணைய உள்ளதாக வெளியாகும் தகவல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

தமிழக வெற்றிக் கழகம் தற்போது காங்கிரஸ் கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது. திமுக உடனான நீண்டகாலக் கூட்டணியை முறித்துக் கொண்டு, சில நிபந்தனைகளின் அடிப்படையில் தவெக-விற்கு ஆதரவளிக்க காங்கிரஸ் முன்வந்துள்ளது.

எனினும், ஆட்சியமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மையைப் பெற இன்னும் 6 உறுப்பினர்களின் ஆதரவு விஜய்க்குத் தேவையாக உள்ளது. இதற்காக விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரியுள்ளது.

 

 

இதனிடையே, யாரும் எதிர்பாராத திருப்பமாக, பல தசாப்தங்களாக அரசியல் களத்தில் எதிரெதிர் துருவங்களாகச் செயல்பட்டு வரும் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க இரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

புதிதாகத் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதைத் தடுக்கும் நோக்கில், திராவிட அரசியலின் இரு பெரும் சக்திகளும் ஒன்றிணையப் புதிய வியூகம் வகுத்து வருவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

 

தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதல்முறையாக திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் கைகோர்க்கும் சூழல் உருவாகியுள்ளதா என்பது மக்களிடையே பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.

Related Articles

Back to top button