பொசன் தானசாலைகள், தோரணங்களுக்கு பொலிஸ் அனுமதி அவசியம்குறித்து வெளியான அறிவிப்பு

எதிர்வரும் பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு தானசாலைகள் மற்றும் தோரணங்களை அமைக்கும் ஏற்பாட்டாளர்கள், தங்களது பிரதேசத்திற்குரிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு முன்கூட்டியே தகவல் வழங்குவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசல்களைத் தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், தானசாலைகள் மற்றும் தோரணங்களை ஏற்பாடு செய்யும் குழுக்கள் வாகன நிறுத்தம் உள்ளிட்ட தேவையான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வழிகாட்டுதல்களை பொலிஸாருடன் ஒருங்கிணைந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, வீதி விபத்துகள் தொடர்பான தகவல்களை 24 மணித்தியாலங்களுக்குள் பொலிஸாருக்கு அறிவிக்கத் தவறும் சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.




