செம்மணி அகழ்வு பணிகள் நிறைவு – மீண்டும் ஜூலையில் ஆரம்பம்

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 32ஆவது நாள் நடவடிக்கைகள் இன்று (23) முன்னெடுக்கப்பட்டன.
அதன்படி, இன்றைய தினம் மட்டும் 19 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் மூலம் மொத்தமாக 412 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 409 என்புக்கூடுகள் வெற்றிகரமாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தற்போதைய கட்ட அகழ்வுப் பணிகள் இன்றுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன், அடுத்த கட்ட பணிகள் எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வுப் பணிகள் தொடர்ந்து கவனத்தை ஈர்த்துவரும் நிலையில், கண்டுபிடிக்கப்பட்ட என்புக்கூடுகள் தொடர்பான மேலதிக ஆய்வுகள் மற்றும் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




