இலங்கைசெய்திகள்வடக்கு மாகாணம்வவுனியா
வவுனியா மேயரின் உறுப்புரிமை நீக்கம்: ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

வவுனியா மாநகரசபை மேயர் சு. காண்டீபனின் உறுப்புரிமை மற்றும் பதவி நீக்கப்பட்டமைக்கு எதிராக இன்று வவுனியாவில் கண்டன ஆர்ப்பாட்டமும் பேரணியும் நடைபெற்றது.
வவுனியா பண்டார வன்னியன் சதுக்கத்தில் ஆரம்பமான ஆர்ப்பாட்டம், மன்னார் வீதி வழியாக முன்னெடுக்கப்பட்டு காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக நிறைவடைந்தது.
ஆர்ப்பாட்டக்காரர்கள், வடக்கு மாகாண ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்ததுடன், ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளிக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான றிசாட் பதியுதீன், ப. சத்தியலிங்கம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.




