புத்தளம் நுரைச்சோலையில் துயரம்: குளிக்கச் சென்ற 3 பேர் நீரில் மூழ்கி பலி

புத்தளம் மாவட்டத்தின் நுரைச்சோலை பகுதியில் அமைந்துள்ள தலுவா முகத்துவாரத்தில் குளிக்கச் சென்ற மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு யுவதிகளும், 24 வயதுடைய இளைஞர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர்கள் குளிப்பதற்காக கடலுக்கு சென்றிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக நீரில் சிக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததையடுத்து பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் அடையாளம் மற்றும் சம்பவத்தின் சூழ்நிலைகள் தொடர்பாக மேலதிக தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
அண்மைக் காலங்களில் கடல் மற்றும் நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், பொதுமக்கள் நீர்நிலைகளில் குளிக்கும் போது கூடுதல் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் பாதுகாப்பு தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர்.




