மட்டக்களப்புஇலங்கை

அநுராதபுர சிறுமிக்கு நீதி கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்

Desktop Image Mobile Image

அநுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சிறுமிக்கு நீதி வழங்குமாறு கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று (27) காலை பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வடக்கு, கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “மதத்தின் பெயரால் பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்க வேண்டாம்”, “அநுராதபுர சிறுமிக்கு நீதி வழங்குக” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பினர்.

 

 

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

Related Articles

Back to top button