
நுவரேலியா மாவட்டத்தின் ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹேவாஹெட்ட பகுதியில் 11 வயது சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்படும் 45 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 28ஆம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இது தொடர்பில் ஹங்குராங்கெத்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் சிறுமியிடம் தவறாக நடந்துகொள்வதை கவனித்த அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் உடனடியாக அவரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி கண்டி போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன், பின்னர் வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஹங்குராங்கெத்த பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.




