கல்விஇலங்கைசெய்திகள்

சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பதாரர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

Desktop Image Mobile Image

2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (G.C.E. O/L) பரீட்சைக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி எதிர்வரும் ஜூலை 23 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாதிருப்பது விண்ணப்பிக்கும் செயல்முறைக்கு தடையாக இருக்காது என்பதால், அனைத்து விண்ணப்பதாரர்களும் காலக்கெடுவுக்கு முன்னதாகவே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளை, பரீட்சை அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அறிவுறுத்தல்களையும் முறையாகப் பின்பற்றி விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்றும், எந்தவொரு காரணத்திற்காகவும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி நீடிக்கப்படாது என்றும் பரீட்சைகள் திணைக்களம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மேலதிக தகவல்கள் அல்லது விளக்கங்களுக்கு 1911 என்ற துரித சேவை இலக்கம் மற்றும் 011 2784537, 011 2786616, 011 2784208 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மூலமாகவும், 011 2784422 என்ற தொலைநகல் (Fax) இலக்கம் மூலமாகவும் தொடர்புகொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button