டெங்கு தடுப்புக்கு புதிய அவசர இலக்கம்

நாட்டில் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அறிவிக்க புதிய அவசர தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
க்ளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் மேலதிக செயலாளர் வெளியிட்டுள்ள தகவலின்படி, பயன்படுத்தப்படாத பாத்திரங்கள், பழைய டயர்கள் மற்றும் நீர் தேங்கக்கூடிய ஏனைய இடங்கள் குறித்து பொதுமக்கள் உடனடியாக தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதற்காக 011 796 6366 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் சுகாதார அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியமானதாகும் எனவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.




