
இலங்கையில் நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு சிறப்பு வெப்பமான வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பகல் நேரங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு கணிசமாக அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், நிலைமை ‘எச்சரிக்கை மட்டத்தில்’ இருக்கும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் அதிக வெப்பத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக, அதிக அளவு தண்ணீர் பருகுதல், நண்பகல் நேரங்களில் நேரடி சூரிய ஒளியைத் தவிர்த்தல் மற்றும் தேவையற்ற வெளிப்புற நடவடிக்கைகளை குறைத்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் வெளிப்புறங்களில் பணியாற்றுபவர்கள் வெப்பத்தின் தாக்கத்துக்கு அதிகம் உள்ளாகக்கூடியவர்கள் என்பதால் அவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது




