யாழ்ப்பாணம்இலங்கைசெய்திகள்வடக்கு மாகாணம்

யாழில் அதிகளவு போதைப்பொருள் பாவித்த இளைஞர் உயிரிழப்பு

Desktop Image Mobile Image

யாழ்ப்பாணம் – கோப்பாய் தெற்கு பகுதியில் அதிகளவு போதைப்பொருளை உட்கொண்டதாகக் கூறப்படும் 33 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் நேற்றுமுன்தினம் இரவு கோப்பாய் தெற்கு பகுதியில் உள்ள வாழைத்தோட்டம் ஒன்றில் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, அவரை நண்பர்கள் மீட்டு வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையின் அடிப்படையில், அதிகளவு போதைப்பொருள் பாவனை காரணமாக மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சடலம் தொடர்பான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன், சாட்சிகளை கோப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தியுள்ளனர்.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related Articles

Back to top button