மலையகம்இலங்கை

மஹரையில் மின்சார உபகரண கடையில் தீ விபத்து – 4 தீயணைப்பு வாகனங்கள் களமிறக்கம்

Desktop Image Mobile Image

மஹர நகரில் அமைந்துள்ள மின்சார உபகரண விற்பனை நிலையம் ஒன்றில் இன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீ வேகமாக பரவியதையடுத்து, அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும் முற்றாக அணைப்பதற்கும் நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதேவேளை, தீயினால் ஏற்பட்ட சேதம் தொடர்பான துல்லியமான தகவல்களும் இன்னும் வெளியாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

தீயணைப்புப் படையினருடன் இணைந்து அப்பகுதி மக்களும் தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தீயை முழுமையாக அணைக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மேலதிக தகவல்கள் பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Back to top button