இலங்கை
பயணத்தின் போது தீப்பற்றிய உந்துருளி – பொதுமக்களின் துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்ப்பு

காலி – அக்குரஸ்ஸ பிரதான வீதியின் கடுகொட பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த உந்துருளி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
உந்துருளியில் இருந்து புகை வெளியேறுவதை அவதானித்த பொதுமக்களும், அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளும் உடனடியாக இணைந்து தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அவர்களின் துரித செயற்பாட்டின் காரணமாக தீ மேலும் பரவுவதற்கு முன்பே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உந்துருளியில் ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாறே தீ விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.




