
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஜூன் மாத நடுப்பகுதியில் வெளியிடப்படும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் தகவல்கள் குறித்து கருத்து தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே, பெறுபேறுகள் வெளியாகும் திகதி இதுவரை இறுதியாக உறுதி செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
கடந்த பெப்ரவரி 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை இந்தப் பரீட்சை நடைபெற்றது.
இந்தப் பரீட்சைக்கு மொத்தமாக 4,51,463 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
அவர்களில் 3,82,249 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்களாகவும், 69,214 பேர் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களாகவும் இருந்ததாக பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.




