மட்டக்களப்புஇலங்கைகிழக்கு மாகாணம்
வயல் காவலாளியாக பணியாற்றிய நான்கு பிள்ளைகளின் தந்தை மரணம்; பொலிஸார் தீவிர விசாரணை

மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாவற்கொடிச்சேனை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (24) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர், பாவற்கொடிச்சேனை தும்பாலஞ்சோலை பகுதியில் வயல் காவலாளியாக பணியாற்றிய நெடியமடு பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபரின் தலையில் வெட்டுக் காயங்கள் காணப்படுவதாகவும், இது கொலைச் சம்பவமாக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இன்று (25) காலை சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




