தாண்டிக்குளத்தில் சோகம்: தொடரூந்தில் மோதிய 23 வயது இளைஞர் உயிரிழப்பு

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் யாழ்ப்பாணம் – கொழும்பு தொடரூந்தில் மோதியதில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் இன்று (17) காலை உயிரிழந்துள்ளார்.
திருநாவற்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடரூந்து தாண்டிக்குளம் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இளைஞர் தொடரூந்து பாதையை கடக்க முற்பட்டாரா அல்லது பாதைக்கு அருகில் நின்றிருந்தாரா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
விபத்து தொடர்பில் தகவல் கிடைத்ததும் வவுனியா பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணத்தை கண்டறிவதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சம்பவம் கவனக்குறைவால் ஏற்பட்டதா அல்லது வேறு காரணங்களால் இடம்பெற்றதா என்பது குறித்தும் ஆராய்ந்து வருகின்றனர்.
தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற இந்த சோகமான சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




