இந்தியா

தவெக தலைவர் விஜய் வீட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்

தவெக தலைவர் விஜயின் வீட்டிற்கு சில ஐஏஎஸ் அதிகாரிகள் நிலையில் வீட்டிற்கு சென்று உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன . ஆட்சி அமைப்பது பற்றிய சில ஆலோசனைகளையும், வழிமுறைகளையும் அவர்கள் விஜயிடம் கூறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் சட்டசபைத் தேர்தலில் மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை தற்போது முடிவடைந்த நிலையில் 107 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலையில் உள்ளன.

 

தமிழக அரசியல் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு இடையேயான போட்டியாக மட்டுமே பார்க்கப்பட்ட நிலையில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை துவங்கி தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.

துவக்கம் முதலே தவெகவுக்கும், திமுகவுக்கும் இடையேதான் போட்டி என அதிரடியாக பேசினார். இதனால், திமுகவின் எதிர்ப்பு ஓட்டுகள் தனக்கு கிடைக்கும் என விஜய் நம்பினார். அது தற்போது உண்மையாக மாறியிருக்கிறது.

 

 

தமிழகத்தில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவாக வாக்குகளை எண்ணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி தவெக 106 தொகுதிகளிலும், திமுக 65 தொகுதிகளிலும், அதிமுக 63 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.

 

ஆட்சி அமைக்க 118 தொகுதிகளில் வெற்றி பெறவேண்டும் என்கிற நிலையில் விஜயின் தவெக 106 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. ஆட்சி அமைக்க இன்னும் 12 தொகுதிகள் தேவை.

எனவே, அதிமுகவின் ஆதரவோடு விஜய் கூட்டணி அமைக்க முயற்சி செய்வார் என தெரிகிறது இதைத்தொடர்ந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் தனது வீட்டில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

 

இதில், ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், ஜான் ஆரோக்யசாமி உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில்தான், சில விஜயின் வீட்டிற்கு சில ஐஏஎஸ் அதிகாரிகள் வந்திருக்கிறார்கள். ஆட்சி அமைப்பது பற்றிய சில ஆலோசனைகளையும், வழிமுறைகளையும் அவர்கள் விஜயிடம் சொல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

Related Articles

Back to top button