வவுனியாவில் பரபரப்பு: விபத்துக்குப் பிறகு மதுபோதையில் இருந்த மோட்டார் சைக்கிள் சாரதி கைது

வவுனியா மாவட்டத்தின் வைரவப்புளியங்குளம் பகுதியில் இன்று (31) இரவு இடம்பெற்ற சாலை விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள ஆதிவிநாயகர் ஆலயத்திற்கு முன்பாக முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணையில், மோட்டார் சைக்கிளை ஓட்டிய நபர் மதுபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த நபர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
விபத்தால் சில நிமிடங்கள் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட போதிலும், பொலிஸாரின் நடவடிக்கையால் நிலைமை விரைவாக சீரடைந்தது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.





