யாழ்ப்பாணம்இலங்கைசெய்திகள்வடக்கு மாகாணம்

மடு யாத்திரை தொடங்குவதற்கு முன் சோகம்: வெடிக்காத பட்டாசு பறித்த இளைஞரின் உயிர்

Desktop Image Mobile Image

மடு மாதா ஆலய யாத்திரையில் பங்கேற்க உற்சாகமாக தயாரான இளைஞர் ஒருவரின் உயிரை, எதிர்பாராத பட்டாசு வெடிப்பு பறித்துள்ள சம்பவம் யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இன்று (02) அதிகாலை சுமார் 2.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

யாத்திரையை முன்னிட்டு பட்டாசுகள் வெடிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, வெடிக்காமல் இருந்த ஒரு பட்டாசை மீண்டும் பற்றவைக்க குறித்த இளைஞர் முயற்சித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த நேரத்தில் பட்டாசு திடீரென வெடித்ததில் அவர் பலத்த காயமடைந்தார். உயிரைக் காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை, வெடிக்காமல் இருக்கும் பட்டாசுகளை மீண்டும் பற்றவைக்க முயற்சிப்பது உயிருக்கு ஆபத்தானது என்பதால், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என பாதுகாப்புத் தரப்பினர் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

Related Articles

Back to top button